துபாயில் இறந்த 3 தமிழர்களின் உடல்கள் சென்னை வந்தன

Subscribe to Oneindia Tamil

சென்னை: துபாயில் பாலம் இடிந்து விழுந்ததில் பலியான 5 தமிழர்களில் 3 பேரின் உடல்கள் இன்று அதிகாலை விமானம் மூலம் சென்னை வந்தது.

துபாயில் உள்ள மரினா என்ற இடத்தில் கடந்த 9ம் தேதி பாலம் கட்டும் பணியில் கட்டடத் தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது பாலத்தின் ஒரு பகுதி இடிந்து 8 இந்தியர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர்.

இதில் 5 பேர் தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள். அவர்களின் விபரம்:

மதியழகன் (ஒரத்தநாடு அருகேயுள்ள காவரம்பட்டு), கார்த்தீபன் (திண்டுக்கல் அருகேயுள்ள மூங்கில்பட்டி), அறிவுமொழி (காட்டுமன்னார்கோவில்), ஷாஜகான் மற்றும் கோவிந்தன் (மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள தும்பைப்பட்டி).

இவர்களில் கார்த்தீபன், அறிவுமொழி, மதியழகன் ஆகியோரது உடல்கள் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் இன்று அதிகாலை 2 மணிக்கு சென்னைக்கு கொண்டு வரப்பட்டனு.

அவர்களது உறவினர்கள் உடல்களைப் பெற்று ஆம்புலன்ஸ் மூலம் தங்கள் ஊர்களுக்குக் கொண்டு சென்றனர்.

ஷாஜகான் மற்றும் கோவிந்தன் ஆகியோரது உடல்கள் நாளை சென்னை வந்து சேரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பலியோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சத்தை தமிழக அரசு நிவாரணமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+