பாம்பு கடி 50 பேர் மருத்துமனையில் அனுமதி
திருநெல்வேலி: பாளையங்கோட்டை அரசு மருத்துமனையில் ஒரே வாரத்தில் 50 பேர் பாம்பு கடித்து அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விஜயநாராயணம் அருகே உள்ள பருத்திப்பாடை சேர்ந்த பெருமாள் மகன் மாடசாமி, மேலமுன்னீர்பள்ளம் செல்லப்பா, வி.கே.புதூர் அருகே தட்டாம்பாறை ஆறுமுகம், புளியங்குடி அருகே கே.கைலாசபுரம் ராஜா, கோபாலசமுத்திரம் மாரியப்பன், ஓட்டபிடாரம் அருகே கீழக்கோட்டை சுப்பையா, ஆகியோர் பாம்பு கடித்து ஒரே நாளில் பாளை அரசு மருத்துமனையில் சேர்க்கப்பட்டனர்.
பாளை ஐகிரவுண்ட முஸ்லீம் அனாதை இல்ல மாணவர் இஸ்ரத், மானூர் அருகே பள்ளிக் கோட்டை சவரிமுத்து, சாத்தான்குளம் முத்தையா, பாளை நாச்சியர், மறுதன்வாழ்வு சரஸ்வதி, நடுவங்குறிச்சி வாகைகுளம் மாடசாமி, பேட்டை சிதம்பரம், மேலதாழையுத்து நாராயணன், டவுன் தெற்குரதவீதி சாந்தி, கடையம் சண்முகவேல், மேலக்கல்லூர் பேச்சி, நடுக்கல்லூர் மாரியப்பன், தென்காசி சுந்தரபாண்டியபுரம் லோகநாதன், நடுவங்குறிச்சி இசக்கி ஆகியோரும் பாம்பு கடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பாம்பு கடித்து 50 பேர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தனியார் மருத்துமனைகளிலும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.












Click it and Unblock the Notifications