நிலத்தகராறில் அரசு பஸ் டிரைவர் வெட்டிக் கொலை!
மதுரை: மதுரை அருகே நிலத்தகராறில் அரசுப் போக்குவரத்துக்கழக டிரைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
மதுரை அருகேயுள்ள கள்ளந்திரி தொப்புலாம்பட்டியில் வசிப்பவர் ராஜா(28). இவர் மதுரை அரசு போக்குவரத்துக் கழகத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 7 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
ராஜாவின் சித்தப்பா மகன்கள் ரவிச்சந்திரன், இளையராஜா, அழகேந்திரன் ஆகியோருக்கு இடையே நிலத்தகராறு இருந்து வந்தது. கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு தான் சமாதானம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு அப்பன் திருப்பதி என்ற பகுதியில் உள்ள மதுக்கடைக்கு சென்று ரவிச்சந்திரன், இளையராஜா, அழகேந்திரன், ராஜா ஆகியோர் சென்று மது அருந்தி உள்ளனர்.
அப்போது அவர்களுக்கிடையே குடிபோதையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் ராஜாவை அவரின் சித்தப்பா மகன்கள் மூவரும் சேர்ந்து அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
அப்போது அருகிலிருந்தவர்கள் சத்தம் கேட்டு அங்கு வந்து ராஜா கொலையானதை பார்த்து கிராம நிர்வாக அதிகாரிக்கு தகவல் கொடுத்தனர். அவர் வந்து பார்த்து ஊமச்சிகுளம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுலைமானுக்கு தகவல் கொடுத்தார்.
அதன் பேரில் விரைந்து வந்த போலீசார் பிரேதத்தை கைப்பற்றி மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குற்றவாளிகளை கண்டு படிக்க தனிப்படை அமைக்கப்படடுள்ளது. டிரைவர் ராஜா படு கொலையால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications