பிரசவத்திற்குப் பின் பெண் தற்கொலை
கோவை: பிரசவத்திற்குப் பின்னர் உடல் சுகவீனம் ஏற்பட்டதால் வேதனை அடைந்த பெண் கோவை அரசு மருத்துவமனையில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்தவர் ஜெகந்நாதன். இவரது மனைவி சரஸ்வதி. கர்ப்பிணியாக இருந்த சரஸ்வதியை கடந்த மாதம் 30ம் தேதி பிரசமத்திற்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இம்மாதம் 4ம் தேதி அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் சரஸ்வதிக்கு ரத்த அழுத்தம் அதிகரித்தது. மஞ்சள் காமாலையும் ஏற்பட்டது. வயிற்றில் தீராத வலியும் ஏற்பட்டது.
இதனால் சரஸ்வதிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று அதிகாலை மருத்துவமனை கழிப்பறையில் சரஸ்வதி தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதனால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications