குஜராத் தேர்தல்: எஸ்.எம்.எஸ். பிரசாரத்திற்குத் தடை
டெல்லி: குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச மாநிலங்களில் நடைபெறும் சட்டசபைத் தேர்தலில் வாக்குப் பதிவுக்கு 48 மணி நேரங்களுக்கு முன்பு எஸ்.எம்.எஸ். மூலம் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
இரு மாநிலங்களிலும் பொதுத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இரு மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளையும் நேற்று டெல்லிக்கு வரவழைத்து அவர்களுடன் தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசாமி மற்றும் இரு தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை நடத்தினர்.
ஆலோசனைக்குப் பின்னர் கோபாலசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், வாக்குப் பதிவுக்கு 48 மணி நேரங்களுக்கு முன்பு எந்த வகையான பிரசாரத்திலும் ஈடுபடக் கூடாது. எனவே எஸ்.எம்.எஸ். மூலமும் பிரசாரம் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளக் கூடாது.
வேட்பாளர்களோ, கட்சியினரோ, கட்சித் தொண்டர்களோ, அல்லது கட்சிக்கு ஆதரவாகவோ வாக்காளர்களுக்கு யாரும் எஸ்.எம்.எஸ். அனுப்பக் கூடாது. அப்படி அனுப்புவோர் மீது தேர்தல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
இந்தியாவில் எஸ்.எம்.எஸ். பிரசாரத்திற்குத் தடை விதிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications