கிருஷ்ணசாமி மீது தாக்குதல்-கைதானவர்களுக்கு ஜாமீன் மறுப்பு
ராமநாதபுரம்: காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கிருஷ்ணசாமி மீது நடத்தப்பட்ட தாக்குதல் வழக்கில் கைதான 11 பேருக்கு ராமநாதபுரம் நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்து விட்டது.
தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கடந்த 29ம் தேதி தேவர் ஜெயந்தி முப்பெரும் விழாவில் கலந்து கொள்வதற்காக முதுகுளத்தூர் வரும்போது கீழகன்னிச்சேரி அருகில் 50 பேர் கொண்ட மர்ம கும்பல் தாக்கிவிட்டு தப்பி ஓடிவி்ட்டது.
இது குறித்து முதுகுளத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து கீழகன்னிச்சேரியை சேர்ந்த முனியசாமி, ரகு, ராமசந்திரன், மலைமேடு, தமிழரசன், கருப்பையா, ரவி, ராமலிங்கம், உப்புலி, உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 11 பேரும் ஜாமீன் வழங்கக் கோரி ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதி ராஜூ முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. கைதான 11 பேருக்கும் ஜாமீன் வழங்க அரசு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதனால் 11 பேருக்கும் ஜாமீன் வழங்க மறுத்து நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications