சிசுவை கடித்து தின்ற நாய்கள்
கோயம்புத்தூர்: கோவையில் பிறந்து சில நாட்களே ஆன சிசுவை தெரு நாய்கள் சில கடித்து தின்றன.
கோவை, ராமநாதபுரத்தில் உள்ள சுங்கம் பூங்கா அருகே தெரு நாய்கள் போட்டி போட்டு, ஒன்றுடன் ஒன்று சண்டை போட்டுக் கொண்டு ஆண் குழந்தையை கடித்துக் குதறி தின்று கொண்டிருந்தன.
அப் பகுதியில் சென்றவர்கள் இதைப் பார்த்து அதிர்ந்து போய் நாய்களை அடித்து விரட்டிவிட்டு குழந்தையை மீட்டனர். ஆனால் அந்தக் குழந்தை இறந்திருந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிசுவின் பிரேதத்தை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த குழந்தை நாய்களால் வீட்டிலிருந்தோ அல்லது மருத்துவமனையில் இருந்தோ இழுத்து வரப்பட்டு, கடித்து இறந்ததா அல்லது கொன்று பூங்காவில் வீசப்பட்ட குழந்தையை நாய்கள் தின்றனவா என்று போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
பிரேதப் பரிசோதனைக்குப் பின்னரே இந்த விவரம் தெரிய வரும் என போலீசார் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications