துபாயில் இறந்த மேலும் 2 தமிழர்களின் உடல்கள் சென்னை வந்தன
சென்னை: துபாயில் பாலம் இடிந்து விழுந்ததில் பலியான 5 தமிழர்களில் மேலும் 2 பேரின் உடல்கள் விமானம் மூலம் திருச்சி வந்தன.
துபாயில் உள்ள மரினா என்ற இடத்தில் கடந்த 9ம் தேதி பாலம் கட்டும் பணியில் கட்டடத் தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது பாலத்தின் ஒரு பகுதி இடிந்து 8 இந்தியர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர். இதில் 5 பேர் தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள்.
இதில் கார்த்தீபன், அறிவுமொழி, மதியழகன் ஆகியோரது உடல்கள் கடந்த 15ம் தேதி எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு அவர்களது சொந்த ஊர்களுக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.
மேலும் ஷாஜகான் மற்றும் கோவிந்தன் ஆகியோரது உடல்கள் விமானம் மூலம் நேற்று திருச்சி வந்து சேர்ந்தன. அவர்களின் உடல்களை உறவினர்கள் கண்ணீர் மல்க பெற்றுக்கொண்டு ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு கொண்டு சென்றனர்.
பலியோர் 5 பேரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.2 லட்சத்தை தமிழக அரசு நிவாரணமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications