For Daily Alerts
Just In
பஸ்சில் சிக்கிய ரூ.1 கோடி ஹவாலா பணம்
கேரளா: பெங்களூரில் இருந்து கேரளா வந்த தனியார் பேருந்தில் வந்த பயணிகளிடம் ரூ.1 கோடி ஹவாலா பணம் பிடிபட்டது.
கேரளா-கர்நாடகா எல்லையில் முதங்கா என்ற இடத்தில் அந்த பேருந்தை கேரள மாநில சோதனை சாவடி போலீசார் சோதனையிட்டனர்.
அப்போது அதில் இருந்த சில பயணிகளிடம் 1 கோடி ரூபாய் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த பணம் குறித்து கேட்டதற்கு முன்னுக்குப்பின் முரணாக பதிலை சொல்லியதால் போலீசார் அவர்களை கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில், இந்த பணத்தை கண்ணூர், கோழிக்கோடு, மஞ்சேரி ஆகிய ஊர்களில் பிரித்து கொடுப்பதற்காக வந்ததாக தெரிய வந்துள்ளது. அவர்கள் தந்த தகவலின்பேரில் மொத்தம் 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த 10 தினங்களுக்கு முன்னர் மைசூர் வழியாக கேரளாவுக்கும் அரசு பேருந்தில் ரூ.80 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Story first published: Sunday, November 18, 2007, 16:59 [IST]