இறந்தவர் சடலத்தை புதைப்பதில் இழுபறி

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: நெல்லை அருகே இறந்தவரை அடக்கம் செய்வதில் இழுபறி ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை மாவட்டம், வீ.கே.புரம் அருகேயுள்ள வடக்கு அகஸ்தியர்புரத்தைச் சேர்ந்தவர் செல்வம் நாடார். வியாபாரியான இவர் கிறிஸ்தவ மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மதம் மாறியுள்ளார்.

இந்நிலையில் செல்வம் நேற்று காலை இறந்துவிட்டார். இந்து மதத்திற்கு மதம் மாறிய செல்வத்தை அப்பகுதியில் உள்ள பொது சுடுகாட்டில் அடக்கம் செய்வதற்காக அவரது மகன் ராமசாமி மற்றும் உறவினர்கள் முயற்சி மேற்கொண்டனர்.

இதற்கு ஒரு தரப்பினர் பொது சுடுகாட்டில் புதைக்க வேண்டுமானால் இந்து முறைப்படிதான் சடங்குகள் செய்ய வேண்டும். கிறிஸ்தவ மதப்படி சடங்கு நடத்த கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அடக்கம் செய்வதில் சிக்கல் எழுந்தது.

இதையடுத்து போலீசாரும் கிராம நிர்வாக அதிகாரி பாலகிருஷ்ணனும் சம்பவ இடத்திற்கு வந்து இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து செல்வத்தின் உடலை பொது சுடுகாட்டில் அடக்கம் செய்வது தவிர்க்கப்பட்டு அவர்களது சொந்த இடத்திலேயே கிறிஸ்தவ முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+