சிலிக்கன் வேலியை 'ஆளும்' இந்தியர்கள்
சிலிக்கன் வேலி: அமெரிக்காவின் சிலிக்கன் வேலியை அடக்கிய சாண்ட் கிளாரா கவுண்டியில் வசிப்பவர்களில் இந்தியர்கள் தான் மிக மிக வசதியான வாழ்க்கையை வாழ்வதாக ஆய்வு தெரிவிக்கிறது.
அப் பகுதியில் மிக அதிகம் படித்தவர்களும், மிக விலையுயர்ந்த சொத்துக்களை வைத்திருப்பவர்களும், சராசரியாக மிக அதிகமாக வருமானம் ஈட்டுபவர்களும் இந்தியர்கள் தான் என சமீபத்திய சென்ஸஸ் தெரிவிக்கிறது.
இப் பகுதியில் வசிக்கும் இந்தியர்களின் சரசாரி வருமானம் 1.16 லட்சம் டாலர்களாகும். இது அப் பகுதியின் சராசரி வருமானத்தை விட 44 சதவீதம் அதிகமாகும்.
மேலும் அங்கு வசிக்கும் சீனர்கள், மெக்சிகோ நாட்டினர், வியட்நாம் நாட்டினரை விட மிக விலை உயர்ந்த சொத்துக்கள், வீடுகள், கட்டங்களும் இந்தியர்கள் வசமே உள்ளன.
இங்கு வசிக்கும் 5 இந்தியர்களில் 4 பேர் குறைந்தபட்சம் பட்டப் படிப்பை முடித்தவர்கள். மேலும் பெரும்பாலான இந்தியர்கள் ஒயிட்-காலர் வேலைகளில் தான் உள்ளனர்.