பெங்களூரில் 9 வழிப்பறி கொள்ளையர்கள் கைது: ரூ.1.8 கோடி பறிமுதல்
பெங்களூர்: பெங்களூரில் இரவில் வாகனங்களில் செல்வோரை தாக்கி வழிப்பறி செய்து வந்த 9 பேர் கும்பல் பிடிபட்டுள்ளது.
அவர்களிடமிருந்து ரூ.1.5 கோடி நகைகள், கார்கள், பைக்குகள், லேப்டாப்கள், செல்போன்கள் மற்றும் ரூ.30 லட்சம் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இரவு நேரங்களில் தனியாக வாகனங்களில் வீடு திரும்பும் சாப்ட்வேர் நிறுவன ஊழியர்களை குறி வைத்து, துரத்தி வழிமறித்து தாக்கி அவர்களிடமிருந்து லேப்டாப், செல்போன், நகை, கிரடிட்-டெபிட் கார்டுகள், கார், பைக்குகள், பணத்தை கொள்ளையடிப்பது வழக்கமாகிவிட்டது.
இந் நிலையில் 9 பேர் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து ரூ.1.5 கோடி மதிப்புள்ள திருட்டு பொருட்களும், ரூ.30 லட்சம் ரொக்கப் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக இந்தக் கும்பல் கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளது. திருடிய வாகனங்களை மும்பை, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் விற்று வந்துள்ளனர்.
13 பேர் கொண்ட இந்தக் கும்பலில் 9 பேர் மட்டும் பிடிபட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள மேலும் 4 பேரைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications