தறிகெட்டு ஓடிய பேருந்து: உயிர் தப்பிய பயணிகள்
Subscribe to Oneindia Tamil
பொள்ளாச்சி: பொள்ளாச்சி பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட பேருந்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பயங்கர வேகத்தில் சுவரில் மோதியது. பேருந்தில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்.
பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இன்று காலை கோவைக்கு தனியார் பேருந்து 35 பயணிகளுடன் கிளம்பியது. புறப்பட்ட சில நிமிடங்களில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியது.
நிலை தடுமாறிய பேருந்து ஊராட்சி ஒன்றிய சுய உதவிக்குழு கட்டிடத்தின் சுற்றுச் சுவரில் மோதி நின்றது. இதில் சுவர் இடிந்து விழுந்தது.
பயணிகள் அனைவரும் வேகமாக பேருந்தை விட்டு கீழே இறங்கினர். பேருந்து நிலையம் அருகிலேயே விபத்து நடைபெற்றதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications