பள்ளி குழந்தைகள் வேனில் கேஸ் கசிந்து தீ!
கோவை: கோவை அருகே கணபதி பகுதியில் பள்ளி குழந்தைகள் சென்ற வேனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இங்குள்ள தனியார் மழலையர் பள்ளிக்கு அருகில் உள்ள பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் வேன் மூலம் வந்து செல்கின்றனர்.
நேற்று காலை மாணவ, மாணவிகளுடன் சங்கனூரில் இருந்து உடையாம்பாளையம் மாரியம்மன் கோவில் அருகே வேன் வந்தபோது இதில் கேஸ் கசிந்தது.
இதை உணராமல் வேன் டிரைவர் வாகனத்தை இயக்கியுள்ளார். அப்போது அதன் பின்னால் பைக்கில் வந்த மயில்சாமி என்பவர் கேஸ் கசிவதை உணர்ந்து வேனை ஓவர்டேக் செய்து டிரைவரை எச்சரித்துள்ளார்.
ஆனால் அதை பொருட்படுத்தாமல் வேன் டிரைவர் வாகனத்தை தொடர்ந்து ஓட்டிச் சென்றார். அப்போது வேனில் தீ பற்றிக் கொண்டது.
இதைக் கண்டு மயில்சாமி சத்தம் போடவே வேனை நிறுத்தினார் டிரைவர் அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஒடி வந்து வேனில் இருந்த பள்ளி குழந்தைகளை காப்பாற்றினர். வேன் முற்றிலும் எரிந்து சாம்பலாகிவிட்டது.












Click it and Unblock the Notifications