சஞ்சய் தத் ஜாமீன் மனு: 27ல் விசாரணை
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மும்பை வெடிகுண்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் சஞ்சய் தத் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு 27ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
மும்பையில் கடந்த 1993ம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்திற்கு மும்பை தடா நீதிமன்றம் 6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தது.
தற்போது புனேயில் உள்ள எரவாடா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சஞ்சய் தத் ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனு மீதான விசாரணை வரும் நவம்பர் 27ம் தேதி விசாரணைக்கு வருகிறது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் தாக்கல் செய்த மனுக்களும் வரும் 27ம் தேதியன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications