ராமேஸ்வரத்தில் பெரும் கடல் கொந்தளிப்பு-விடிய விடிய மழை
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்: வங்க கடலில் மீண்டும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ள நிலையில் ராமேஸ்வரத்தில் பெரும் கடல் கொந்தளிப்பு காணப்படுகிறது.
மேலும் இந்த மாவட்டத்தில் நேற்று இரவு முதல் விடிய விடிய மழை பெய்தது. இன்று காலையும் மேரமூட்டத்துடன் அவ்வப்போது மழை தூறி வருகிறது.
கன மழையால் ராமேஸ்வரத்தில் சாலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் நீர் புகுந்துள்ளது.
ராமேஸ்வரம், பாம்பன், தனுஷ்கோடி, முகுந்தராயர் சத்திரம் ஆகிய பகுதிகளில் கடலில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
ராட்சத அலைகள் எழும்பி வருகின்றன.
இதனால் பெரும்பாலான மீனவர்கள் இன்று கடலுக்குள் செல்லவில்லை.












Click it and Unblock the Notifications