கச்சத் தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய கோரும் விஜய்காந்த்
Subscribe to Oneindia Tamil
சென்னை: மீனவர்கள் நலன் கருதி கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அரசிற்கு கூறியுள்ளார்.
உலக மீனவர் தினத்தையொட்டி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் ஆண்டு முழுவதும் மீன் பிடிக்கும் வகையில் கடல் வளம் நிறைந்த கடற்கரை உள்ளது.
ஆனால், இலங்கையுடன் மத்திய அரசு செய்து கொண்ட கச்சத்தீவு ஒப்பந்தத்தால் மீனவர்கள் கடலுக்கு போகவே பயப்படும் நிலை உள்ளது. இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்.
அந்தத் தீவில் நமது மீனவர்கள் சுதந்திரமாக மீன் பிடிக்க வகை செய்ய வேண்டும். மீனவர்களுக்கு குறைந்த விலையில் டீசல் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications