For Daily Alerts
Just In
வைகை அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் நிறுத்தம்!
சிவகங்கை: வைகை அணையிருந்து சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படுவது திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.
வைகை அணையில் இருந்து சிவகங்கை மாவட்டத்திற்கு பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. வைகை அணையில் நீர்வரத்து அதிகமாக இருந்ததால், கடந்த நவம்பர் 13ம் தேதியில் இருந்து 1,000 கன அடி நீர் கூடுதலாக திறக்கப்பட்டது.
இந்த நீர் நேற்று முன் தினம் முதல் வினாடிக்கு 725 கன அடியாக குறைக்கப்பட்டு பின்னர் மாலையில் சுத்தமாக அந்த தண்ணீர் நிறுத்தப்பட்டுவிட்டது.
நேற்று மாலை வைகை அணையின் நீர் மட்டம் 63.65 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,671 கனஅடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
Comments
Story first published: Saturday, December 15, 2007, 20:19 [IST]