For Daily Alerts
Just In
திருப்பதியில் ஐன்ஸ்டீனுக்கு சிலை-ராஜசேகர ரெட்டி திறக்கிறார்
திருப்பதி: திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலைக் கல்லூரி சர்க்கிள் பகுதியில் விஞ்ஞானி ஆல்பிரட் ஐன்ஸ்டீனுக்கு சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையை டிசம்பர் 6ம் தேதி ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி திறந்து வைக்கிறார்.
திருப்பதியில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா கலைக் கல்லூரி சர்க்கிள் பகுதியில், ஐன்ஸ்டீனுக்கு சிலை நிறுவப்பட்டுள்ளது.
இந்த சிலை டிசம்பர் 6ம் தேதி திறந்து வைக்கப்படுகிறது. ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி சிலையைத் திறந்து வைக்கிறார். மேலும், இதே விழாவில் ஆரோக்கிய ஸ்ரீ இன்சூரன்ஸ் திட்டத்தையும் அவர் தொடங்கி வைக்கிறார்.
மாணவர்களிடையே, அறிவியல் ஆய்வு உணர்வை ஊக்கப்படுத்தும் வகையிலேயே ஐன்ஸ்டீனின் சிலை நிறுவப்பட்டுள்ளதாக சிலை வடிப்புக் குழுத் தலைவர் வெங்கடராமி ரெட்டி கூறியுள்ளார்.
Comments
Story first published: Friday, November 23, 2007, 11:41 [IST]