கேரள கோவிலில் விஜயகாந்த் மனைவிக்கு பாத பூஜை
Subscribe to Oneindia Tamil

கேரள மாநிலம், திருவல்லா அருகே ஆட்டுக்கல் என்ற இடத்தில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் ஸ்ரீபகவதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பொங்கல் விழாவும், பெண்களுக்கு செய்யப்படும் பாத பூஜையும் மிக பிரசித்தி பெற்றதாகும்.
தற்போது ஆட்டுக்கல் பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் விழா நடைபெற்று வருகிறது. அடுத்து பெண்களுக்கு செய்யப்படும் பாத பூஜை விழா டிசம்பர் 21ம் தேதி நடைபெறும்.
இந்த பூஜையின் போது கோவிலின் முக்கிய காரியதரிசி, பெண்களின் கால்களை கழுவி பூக்களால் பூஜை செய்வார். இந்த பூஜை செய்தால் சுபிட்சம் நிலைக்கும் என்ற நம்பிக்கையில் இந்த பாத பூஜை நடத்தப்படுகிறது.
இந்த வருடம் நடைபெறவிருக்கும் பாத பூஜை விழாவில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவுக்கும், மத்திய பெண் அமைச்சர் புரந்தேஸ்வரிக்கும் முதன் முறையாக பூஜை நடத்தப்படுகிறது. அதனைத் தொடர்ந்து லட்சக்கணக்கான பெண்களுக்கு பாதபூஜை நடைபெறும்.












Click it and Unblock the Notifications