பெங்களூர் சாப்ட்வேர் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: பெங்களூரில் இன்று அதிகாலை தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.
பெங்களூரில் உள்ள ஜெனிசிஸ் மைக்ரோசிப் (இந்தியா) லிமிட்டெட் என்ற சாப்ட்வேர் நிறுவனத்தில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் முதலாவது மாடியில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது.
இதையடுத்து தீயணைப்புப் படைக்கு தகவல் பறந்தது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
மின் கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் முதல் மாடியில் இருந்த அனைத்துப் பொருட்களும் எரிந்து விட்டன. உயிர்ச் சேதமோ, காயமோ எதுவும் இல்லை. பொருட் சேதத்தின் மதிப்பு இன்னும் கணக்கிடப்படவில்லை.












Click it and Unblock the Notifications