கயத்தாறு அருகே நாட்டாமைகள் மோதல் - ஒருவர் காது 'கட்'
கயத்தாறு: நெல்லை மாவட்டம் கயத்தாறு அருகே தலையால் நடந்தான்குளம் என்ற கிராமத்தில் இரு நாட்டாமைகளுக்கு இடையே நடந்த மோதலில் ஒருவரது காது கடித்துத் துப்பப்பட்டது.
தலையால் நடந்தான்குளம் கிராமத்தில் நாட்டான்மைகளாக இருப்பவர்கள் சின்ன இசக்கிமுத்து, ஆறுமுகம். இரண்டு பேரும் கார்த்திகை தீபவிழா வழிபாட்டிற்காக ஊரில் வரி வசூல் செய்தனர். அப்போது சின்ன இசக்கிமுத்து ஆறுமுகத்திடம் பழைய வரி வசூல் ரூபாய் 500ஐ கேட்டுள்ளார்.
இதில் இரண்டு பேருக்கும் இடையே தகராறு வந்தது. ஒருவரையொருவர் தள்ளிக் கொண்டனர். அப்போது ஆறுமுகத்தின் உறவினர் செல்லத்துரை அங்கு வந்தார். அவர் சின்னஇசக்கிமுத்துவின் 2 கைகளையும் பின்னால் பிடித்துக் கொண்டார்.
அப்போது ஆறுமுகம், வரியா கேட்கிறாய், உனக்கு இனி காதே கேட்கக் கூடாது என்று கூறி சின்ன இசக்கிமுத்துவின் வலது காதை கடித்து துப்பினார்.
காது பறிபோனதால் வலியால் துடித்த சின்ன இசக்கிமுத்து ரத்தம் சொட்ட சொட்ட துண்டிக்கப்பட்ட காதை ஒரு கையில் எடுத்துக் கொண்டு கயத்தாறு போலீஸ் நிலையம் வந்தார்.
அங்கு போலீஸாரிடம் புகார் கொடுத்தார். போலீஸார் வழக்குபதிவு செய்து காதைக் கடித்த ஆறுமுகத்தையும், செல்லத்துரையையும் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications