என் பெயரில் சிபாரிசு வந்தால் ஏற்காதீர்கள் - மு.க.அழகிரி
Subscribe to Oneindia Tamil
மதுரை: அரசு அலுவலகங்களில் எனது பெயரில் யாராவது சிபாரிசு கடிதத்துடன் வந்தால் அதை ஏற்க வேண்டாம் என்று முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமீப காலமாக அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் எனது பெயரை பயன்படுத்தி, எனது பயெருக்கு களங்கம் ஏற்படுத்தக் கூடிய வகையில் சிலர் தவறான பரிந்துரைகளை செய்து வருவதாக தெரிய வருகிறது.
எனவே, என் சார்பாகவோ அல்லது என் பெயரைச் சொல்லியோ யாரேனும் சிபாரிசுடன் வந்தால் அதை ஏற்க வேண்டாம்.
ஒப்பற்ற தலைவர் முதல்வர் கருணாநிதி அவர்களின் நல்லாட்சியில் பல முன்னேற்ற திட்டங்களை நிறைவேற்றிடவும், மக்கள் பணிக்கும், கழக உடன் பிறப்புகளுக்கும் துணையாக நின்று உதவி செய்திட வேண்டும் என்கிற போது நானே நேரில் தொடர்பு கொள்வேன் என்று கூறியுள்ளார் அழகிரி.












Click it and Unblock the Notifications