கொலை வழக்கு குற்றவாளி 3 ஆண்டுகளுக்கு பிறகு கைது
பெரம்பலூர்: பெரம்பலூரில் தீவிரவாதி கொலை வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி மூன்று வருடங்களுக்கு பிறகு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
பெரம்பலூரில் எஸ்.பி பிரேம் ஆனந்த் சின்கா உத்திரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவீர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மங்களமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமநாதன் தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, வாகனத்தில் வந்த ஒருவரை பிடித்து விசாரித்த போது முன்னுக்கு பின் முரனாக பதில் சொன்னார்.
தீவிர விசாரணையில் அவர் கூவாகத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் கருப்பையா என்று தெரிய வந்தது. தமிழ் அடிப்படைவாத இயக்கத்தை சேர்ந்த வல்லம் அறிவழகனை கொலை செய்த வழக்கில் இவர் தேடப்பட்டு வந்த பழைய குற்றவாளி எனவும் தெரியவந்தது.
கடந்த மூன்று வருடங்களாக போலீசாருக்கு தெரியாமல் தலைமறைவாக இருந்துள்ளார். இவரை போலீசார் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இவர் மீது ஏற்கனவே பல திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடதக்கது.
கைது செய்யப்பட்ட கருப்பையாவிடமிருந்து 3 மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.












Click it and Unblock the Notifications