இந்தியாவின் நண்பனா இலங்கை? - நாஞ்சில் சம்பத் சவால்!
ஈரோடு: இலங்கை அரசு ஒருபோதும் இந்தியாவுக்கு சாதகமாக இருந்ததே இல்லை. அப்படி இருந்ததாக யாராவது நிரூபித்தால், நான் பேசுவதையே நிறுத்தி விடுகிறேன் என்று மதிமுக கொள்கை விளக்க அணி செயலாளர் நாஞ்சில் சம்பத் சவால் விட்டுள்ளார்.
ஈரோட்டில் நடந்த மதிமுக சார்பில் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட நாஞ்சில் சம்பத் பேசுகையில், தமிழகத்தில் இன்று விலைவாசி விஷம் போல் ஏறிக்கொண்டே இருக்கிறது. கடந்த ஆட்சியில் ரூ.140 ஆக இருந்த சிமெண்ட் மூட்டை இன்று ரூ.300 ஆகிவிட்டது.
கட்டட மணல் லோடு ரூ.1,400 ஆக இருந்தது இப்போது ரூ.6,000 ஆகிவிட்டது. இப்படியிருந்தால் சாதாரண மக்கள் வீடு கட்ட முடியுமா.
தேங்காய் விலை அடியோடு சரிந்து விட்டது. இதனால் தென்னை விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தமிழர்களுக்காக போராடும் விடுதலைப் புலிகளுக்கான தடையை நீக்க வேண்டும் என்று நாங்கள் கேட்கிறோம். அதைப் பேசினால் நாங்கள் தீவிரவாதத்தை ஆதரிக்கிறோம் என்கிறார்கள்.
இலங்கை எப்போதுமே இந்தியாவுக்கு சாதகமாக இருந்ததே கிடையாது. அப்படி என்றைக்காவது சாதகமாக இருந்த விஷயத்தை சொல்ல சொல்லுங்கள். நான் இனிமேல் பொதுக்கூட்ட மேடையில் பேசுவதையே நிறுத்திக் கொள்கிறேன் என்றார் நாஞ்சில் சம்பத்.












Click it and Unblock the Notifications