மாணவனை அடித்த பள்ளி ஆசிரியர் மீது வழக்கு
Subscribe to Oneindia Tamil
விருதுநகர்: பள்ளி மாணவனை பிரம்பால் அடித்த ஆசிரியர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
விருதுநகரைச் சேர்ந்தவர் லாரி டிரைவர் முத்துக்கிருஷ்ணனின் மகன் குருமூர்த்தி(13)அங்குள்ள நடுநிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறான்.
ஆசிரியர் கொடுத்த வீட்டுப் பாடங்களை குருமூர்த்தி முடிக்காததால் கோபமடைந்த ஆசிரியர் அந்த மாணவனை பிரம்பால் அடித்துள்ளார். இதில் மாணவன் காயமடைந்தான், காய்ச்சலும் வந்தது.
வீடு திரும்பிய குருமூர்த்திக்கு காய்ச்சல் மிக அதிகமானதால் பெற்றோர் அவனை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
தனது மகனை அடித்த ஆசிரியர் ஞானக்கண் மீது மாணவனின் தந்தை முத்துக்கிருஷ்ணன் போலீசில் புகார் செய்துள்ளார். அதன் பேரில் போலீசார் ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications