மலேசிய தமிழர்களை காக்க பிரதமருக்கு வைகோ கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை: மலேசிய தமிழர்களைப் பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அவரது கடிதத்தில்,
மலேசிய இந்தியர்களில் 90 சதவீதம் பேர் தமிழர்கள். இவர்களை கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் வர்த்தகம் போன்றவற்றில் பாகுபாட்டுடன் நடத்தப்படுகின்றனர். தமிழர்களின் வழிபாட்டு ஸ்தலங்கள் சேதப்படுத்தப்படுகின்றன.
இந்நிலையில் கடந்த 25ம் தேதி மகாத்மா காந்தியின் படத்தைத் தாங்கிக் கொண்டு அமைதியாக பேரணி நடத்திய, இந்திய வம்சாவளியினர் மீது மலேசிய போலீசார் பலப் பிரயோகம் செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அந்நாட்டு பிரதமர் படாவி வெளியிட்டுள்ள அறிக்கை ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை. எனவே மலேசிய இந்தியர்களைப் பாதுகாப்பதற்கு அரசு ரீதியான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று கடிதத்தில் வைகோ கோரியுள்ளார்.












Click it and Unblock the Notifications