ராணுவ தளபதி பதவியிலிருந்து விலகினார் முஷாரப்

Subscribe to Oneindia Tamil


இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவ தளபதி பதவியிலிருந்து அதிபர் முஷாரப் இன்று பதவி விலகினார்.

கடந்த 1998ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி ராணுவ தளபதி பொறுப்பை ஏற்றவர் முஷாரப். பின்னர் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் ஆட்சியை கவிழ்த்துவிட்டு ராணுவ அடக்குமுறை மூலம் அந்நாட்டு அதிபர் பதவியை கைப்பற்றினார்.

அதிபர் பதவி மற்றும் ராணுவ தளபதி பதவி இரண்டையும் வகித்து வந்தார். இந்நிலையில் முஷாரப் ஒரு பதவியை மட்டும் தான் வகிக்க வேண்டும் என்று பாகிஸ்தானில் அவருக்கு எதிராக போராட்டங்கள் எழுந்தன.

இைதயடுத்து முஷாரப் ராணுவ தளபதி பதவியை விட்டு விலக முடிவு செய்தார். அதன்படி இன்று காலை தனது ராணுவ தளபதி பதவியிலிருந்து விலகிய முஷாரப், ஜெனரல் ரஷ்பக் பர்வேஸ் கியானியிடம் ராணுவ தளபதி பதவியை ஒப்படைத்தார்.

இது தொடர்பாக ராவல்பிண்டியில் உள்ள ராணுவ தலைமையகத்தில் நடந்த விழாவில் முஷாரப் பேசியதாவது,

ராணுவம் தான் என் உயிர் மூச்சு. ராணுவ உடை அணிந்திருக்கும்போது எனது உயிர் பிரிய வேண்டும் என்று நினைத்தேன். கடந்த 9 வருடங்களாக ராணுவ தளபதி பதவியில் இருந்துவிட்டு தற்போது விலகுகிறேன் என்று மிக உருக்கமாக பேசினார்.

அந்நாட்டு உச்ச நீதிமன்றம் முஷாரப் பாகிஸ்தான் அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றது செல்லும் என்று ஏற்கனவே அறிவித்து விட்டதால், நாளை பாகிஸ்தான் அதிபராக முஷாரப் மீண்டும் பதவியேற்க இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+