For Daily Alerts
Just In
மலேசிய தமிழர்கள் நிலை குறித்து காங்கிரஸ் கவலை
இதுகுறித்து மத்திய தகவல் தொடர்புத்துறை இணை அமைச்சரும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான ஷகீல் அகமது செய்தியாளர்களிடம் பேசுகையில், மலேசிய இந்தியர்கள் விவகாரம் குறித்து வெளியுறவு அமைச்சகத்துடன் காங்கிரஸ் கட்சி தொடர்பு கொண்டுள்ளது.
மலேசியாவில் வசிக்கும் இந்தியர்கள், சிறந்த நடத்தைக்குப் பெயர் போனவர்கள். எனவே அவர்களின் தற்போதைய நிலை குறித்து காங்கிரஸ் கட்சி கவலை அடைந்துள்ளது. அவர்களின் பிரச்சினைகளை உரிய முறையில் தீர்வு காண முயலுமாறு மலேசிய அரசை காங்கிரஸ் கட்சி கேட்டுக் கொள்கிறது என்றார் ஷகீல் அகமது.
Story first published: Thursday, November 29, 2007, 9:50 [IST]