வீடு புகுந்து பெண்ணுக்கு முத்தம் - வாலிபருக்கு அடி
சென்னை: சென்னையில் இளம் பெண்ணை தொடர்ந்து வந்து, அவர் வீட்டுக்குள் நுழைந்தபோது கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்த வாலிபரை பொதுமக்கள் வளைத்துப் பிடித்து வகையாக அடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்தவர் மாலதி (20). இவர் தண்டையார்பேட்டையில் உள்ள ஒரு மருந்துக் கடையில் வேலை பார்த்து வருகிறார்.
இரவில் பணி முடிந்து வீடு திரும்பினார். அப்போது ஒரு இளைஞர், மாலதியை பின் தொடர்ந்து வந்தார். இதனால் வேகம் வேகமாக நடந்த மாலதி, வீட்டுக்குள் வேகமாக நுழைந்தார்.
அப்போது அந்த நபர் வேகமாக வந்து மாலதியைக் கட்டிப் பிடித்து வேகமாக முத்தமிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாலதி சத்தம் போட்டு ஊரைக் கூட்டினார்.
இதையடுத்து அந்த நபர் வேகமாக ஓட முயற்சித்தார். ஆனால் பொதுமக்கள் படு சுதாரிப்பாக அவரை விரட்டிப் பிடித்து சரமாரியாக அடித்து துவைத்தனர்.
பின்னர் போலீஸாரிடம் அவரை ஒப்படைத்தனர். அவரது பெயர் வையாபுரி. 22 வயதாகும் அவர் ஒரு திருடன். பல வழக்குகள் உள்ளன. இந்த முறை இளம்பெண்ணை மடக்கி முத்தம் கொடுத்து சிக்கிக் கொண்டார்.












Click it and Unblock the Notifications