ரூ. 1077 கோடியில் 6 சரக்கு கப்பல்கள் வாங்க மத்திய அரசு முடிவு
Subscribe to Oneindia Tamil

இத் தகவலை நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார். பொருளாதார விவகாரங்களுக்கான கேபினட் அமைச்சர்களின் கூட்டம் இன்று நடந்தது. இக் கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் பேசிய சிதம்பரம்,
இந்திய ஷிப்பிங் கார்பொரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்துக்கு ரூ. 1,077.60 கோடியில் 6 ஹேண்டிமேக்ஸ் ரக கப்பல்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு கப்பலும் ரூ. 179.60 கோடி மதிப்புள்ளதாகும்.
இதற்குத் தேவையான நிதியில் 80 சதவீதத்தை உள் நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ ஷிப்பிங் கார்பொரேஷன் திரட்டும். மீதத் தொகையை தானே முதலீடு செய்யும்.
சொந்த கப்பல்களை பயன்படுத்துவதன் மூலம் ஏராளமான அன்னிய செலாவணியை மிச்சப்படுத்த முடியும் என்றார்.












Click it and Unblock the Notifications