மலேசிய அரசுடன் பேசி வருகிறோம்-பிரணாப் முகர்ஜி
{image-Pranab Mukerjee250_30112007.jpg tamil.oneindia.com}டெல்லி: மலேசியாவில் தமிழர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதல் குறித்து அந் நாட்டு அரசுடன் மத்திய அரசு பேசி வருவதாகவும், தமிழக முதல்வர் குறித்து அந் நாட்டு அமைச்சர் தவறாகப் பேசியகு குறித்தும் விளக்கம் கேட்கப்படும் என்றும் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
முதல்வர் கருணாநிதிக்கு எதிராக கருத்து வெளியிட்ட மலேசிய அமைச்சர் நசீர் அஸ்ரியின் பேச்சைக் கண்டித்து இன்று ராஜ்யசபாவில் திமுக உறுப்பினர் சண்முக சுந்தரம் பிரச்சனை கிளப்பினார்.
இந்திய பிரதமருக்கு கருணாநிதி கடிதம் எழுதியதை மலேசிய அமைச்சர் எப்படி கண்டிக்க முடியும் என சண்முக சுந்தரம் கேட்டார். இதே கருத்தை பல கட்சிகளின் உறுப்பினர்களும் தெரிவித்தனர்.
காங்கிரஸ் உறுப்பினர்களான ஞானதேசிகன், மங்னிலால் மண்டல், பாஜக உறுப்பினர் அலுவாலியா ஆகியோர் மலேசிய அமைச்சரைக் கண்டித்துப் பேசியதோடு, மலேசிய தூதரை மத்திய அரசு அழைத்து தனது எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும் என்றனர்.
இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் சுரேஷ் பச்செளரி, மலேசிய அமைச்சரின் கண்டிக்கத்தக்க பேச்சு குறித்து மலேசிய அரசிடம் நிச்சயமாக பேசப்படும் என்றார்.
இதைத் தொடர்ந்து அறிக்கை வாசித்த வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி,
வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் நலனைக் காப்பதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. மலேசியாவுடன் நமக்கு நல்ல உறவு உள்ளது. இந்த விவகாரத்தில் மலேசிய அரசை மத்திய அரசு தொடர்பு கொண்டு பேசி வருகிறது.
நமது மரியாதைக்குரிய தலைவரான தமிழக முதல்வர் கருணாநிதி குறித்து அந் நாட்டு அமைச்சர் பேசியது குறித்தும் மலேசிய அரசுடன் நான் பேசுவேன். நான் மலேசிய நிர்வாகத்துடன் தொடர்பில் உள்ளேன். இந்த பிரச்சனைகள் குறித்து விவாதிப்பேன்.
மலேசியாவில் இந்திய வம்சாவளியினர் பெரும் எண்ணிக்கையில் வசிக்கின்றனர். பிரிட்டிஷாரால் மலேசியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட இந்தியர்களின் வம்சாவளியினர் தாங்கள் அங்கு இரண்டாதர குடிமக்களாக நடத்தப்படுவதை கண்டித்து பிரிட்டனுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
அந்த வழக்கில் தங்களுக்கு பிரிட்டிஷ் அரசியின் ஆதரவு கோரி பிரிட்டிஷ் தூதரகத்தில் மனு கொடுக்கத்தான் பேரணி நடத்தியுள்ளனர் என்றார்.












Click it and Unblock the Notifications