தண்டவாளத்தில் விரிசல்: நடு வழியில் நின்ற சென்னை ரயில்

Subscribe to Oneindia Tamil


சென்னை: ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால் செகந்திராபாத்தில் இருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டது.

ஆந்திர மாநிலம் நலகொண்டா மாவட்டத்தில் ஒத்தளபாளையம் என்ற இடத்தில் ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது.

அந்த வழியே வந்த நர்சாபூர் எக்ஸ்பிரஸ் ரயிலின் டிரைவர் அதை கவனித்துவிட்டதால் ரயிலை நிறுத்திவிட்டார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இது குறித்து அறிந்த உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து தண்டவாளத்தை சீரமைத்தனர்.

இந்தப் பணியின் காரணமாக ஹைதரபாத்தில் இருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரயில் நடு வழியில் நிறுத்தப்பட்டது. அதே போல திருப்பதியில் இருந்து செகந்திராபாத் சென்று கொண்டிருந்த நாராயணாத்ரி ரயிலும் நிறுத்தப்பட்டது.

சுமார் 4 மணி நேரங்களுக்குப் பின் இரு ரயில்களும் புறப்பட்டுச் சென்றன.

மதுரையில் தண்டவாளத்தில் சதி:

இந் நிலையில் மதுரை கூடல்நகர் ரயில் நலையத்தில் தண்டவாளத்தில் போல்டுகள் இன்று கழற்றப்பட்டிருந்தன.

இதனால் அப்பா‌தையில் தானியங்கி சிக்னல்கள் இயங்கவில்லை. இதனையடுத்து அந்த தண்டவாளத்தை அதிகாரிகள் சோதனாயிட்டு கோளாரை சரி செய்தனர்.

போல்டுகள் கழற்றப்பட்டது குறித்து ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+