பிரபல திருட்டுத் தம்பதி கைது!
திருநெல்வேலி: தென் மாவட்டங்களில் பல்வேறு திருட்டுக்களில் தொடர்புடைய, நீண்ட காலமாக போலீஸாரால் தேடப்பட்டு வந்த திருட்டுத் தம்பதியை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்தத் திருட்டு கணவன், மனைவிக்கு 28 வழக்குகளில் தொடர்பு இருக்கிறதாம்.
நெல்லையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த நெல்லை சரக டிஐஜி பி.கண்ணப்பன் கூறுகையில், கைது செய்யப்பட்டவர்கள் பெயர் முருகேசன் (48), ஜேசுமணி (36). இருவரும் கணவன், மனைவி ஆவர்.
இருவருக்கும் தொழிலே திருட்டுதான். இருவரும் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள கிராமப்புறங்களில் போய் வீடு வாடகைக்கு எடுத்துத் தங்குவர்.
பின்பு அங்குள்ள பெண்களிடம் நெருக்கமாக பழி அவர்கள் வீடுகளில் தனியாக இருக்கும்போது குளிர்பானங்களில் மயக்க மருந்துகளைக் கலந்து கொடுத்து விட்டு, நகை, பணத்தைத் திருடிச் சென்று விடுவர்.
இதுவரை நெல்லையில் மட்டும் 21 வழக்குகளில் 63 பவுன் தங்க நகைகளை இவர்கள் திருடியுள்ளனர். கன்னியாகுமரியில் 5 வழக்குகளில் 20 பவுன் நகைகளையும், தூத்துக்குடி மாவட்டத்தில் 2 வழக்குகளில் 8 பவுன் நகைகளையும் இவர்கள் திருடியுள்ளனர் என்றார்.












Click it and Unblock the Notifications