தூத்துக்குடி மாணவிகளின் கண் தானம்-கலெக்டர் நேரில் பாராட்டு

தூத்துக்குடியில் உள்ள திருச்சபை ஆங்கிலோ-இந்திய மேல்நிலைப்பள்ளியின் தேசிய மாணவியர் படையைச் சேர்ந்த 13 மாணவிகள் தமது தாய், தந்தை ஒப்புதலோடு தங்களது கண்களை தானம் அளிக்க முன் வந்துள்ளனர்.
துத்துக்குடி பார்வை இழப்பு தடுப்பு சங்கத்தோடு இணைந்து தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கண்தான படிவங்களை அளித்து இப்பள்ளி தேசியப் படை மாணவிகள் தங்கள் விருப்பத்தை பதிவு செய்துள்ளனர்.
8ம் வகுப்பு படிக்கும் ஷாலினி, ஆஸ்மீன், நீலா, மகிழ், நிஷனா ஆகிய மாணவிகளும், 9ம் வகுப்பு படிக்கும் சுஜாதா, அபிநயா, பிரனயா, பிரிதர்ஷினி, பிரதிர்ஷ்டா, வெண்ணிலா, அஷீலா, பென்டி, செல்வசுந்தரி ஆகிய மாணவிகள் இந்த தானத்தை செய்ய முன் வந்துள்ளனர்.
இதைப் பாராட்டி தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் முனைவர் அர.பழனியாண்டி மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார். இந்த கண்தான நிகழ்ச்சியில் பென்டி, செல்வசுந்தரி ஆகிய மாணவிகளின் பெற்றோர்களும் தங்கள் கண்களை தானம் செய்ய முன்வந்தனர்.












Click it and Unblock the Notifications