மருத்துவ மாணவர்கள் போராட்டத்தை வேடிக்கை பார்க்கும் அரசு-ராமதாஸ்
தூத்துக்குடி: கிராம மக்களுக்கு சேவை செய்ய மறுத்து மருத்துவ மாணவர்கள் நடத்தும் போராட்டத்தை தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
கடந்த செப்டம்பரில் இருந்து மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால் பிரச்சனையின் தீவிரத்தை தெளிவுப்படுத்த யாரும் முன்வரவில்லை.
மாணவர்கள் முதல்வரை சந்தித்ததும் போராட்டம் வாபஸ் என்று அறிவித்தனர். ஆனால் மீண்டும் நூதன போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.மருத்துவ படிப்பு கால நீட்டிப்பு என்பது பேச்சளவில்தான் உள்ளது. இன்னும் அரசாணை வெளியிடப்படவில்லை.
கிராமங்களில் சேவை செய்ய மறுக்கும் மருத்துவர்கள் கிராம மக்களுக்கு எதிரானவர்கள். 3 மாதங்களாக இந்த பிரச்சனையை அரசு வேடிக்கை பார்த்து வருகிறது. இப்பிரச்சனையை வைத்து பாட்டாளி மக்கள் கட்சியை யாரும் தனிமைப்படுத்திவிட முடியாது என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications