பாலாறு அணை: வைகோ உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
வேலூர்: பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவதை எதிர்த்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டத் திட்டமிட்டுள்ளது. இதற்கான பூர்வாங்கப் பணிகளை அது தொடங்கியுள்ளது. இந்த மாதத்தில் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி அணைப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைக் கண்டித்து மதிமுக சார்பில் மாநிலம் முழுவதும் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
வேலூரில் அக் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. இப்போராட்டத்தில் வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications