திமுக ஆதரிப்பதையெல்லாம் காங்கிரஸ் ஆதரிக்காது-எஸ்.ஆர்.பி
சென்னை: காங்கிரசுக்கும், திமுகவுக்கு தனித்தனிக் கொள்கைகள் உள்ளன. இதனால் திமுக ஆதரிப்பதையெல்லாம் காங்கிரஸ் கட்சி ஆதரிக்காது என்று முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
காங்கிரஸ் கட்சிக்கும், திமுகவுக்கும் தனித்தனிக் கொள்கைகள் உள்ளன. அதில் எது ஏற்புடையதோ அதை மட்டும் தான் காங்கிரஸ் ஏற்கும். திமுக ஆதரிப்பதையெல்லாம் காங்கிரஸ் கட்சி ஆதரிக்காது.
என் வீட்டின் பூட்டை உடைத்து பொருட்களை சூறையாடினார்கள். அந்த சம்பவம் நடந்து 27 மாதங்கள் ஆகிவிட்டது. அது சம்பந்தமாக காவல்துறை இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டும் காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது.
மருத்துவக் கல்லூரி மாணவர்களின் படிப்புக் காலத்தை நீட்டிக்கக் கூடாது என்ற கோரிக்கை நியாயமானது தான். படிப்பு முடித்தவுடன் கிராமப்புற சேவை செய்தால் தவறு ஏற்பட வாய்ப்புகள் உண்டு என்றார் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம்.
விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வனுக்கு முதல்வர் கருணாநிதி இரங்கல் தெரிவித்தைதையே எஸ்ஆர்பி மறைமுகமாக கண்டிப்பதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications