12 விடுதலைப் புலிகள் பலி
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: இலங்கையில் வன்னி மற்றும் யாழ்ப்பாணத்தில் நடந்த சண்டைகளில் 19 விடுதலைப் புலிகள் உயிரிழந்தனர். இரு தரப்பிலும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
மன்னார் பகுதியில் உள்ள மாந்தை என்ற இடத்தில் ஒரு விடுதலைப் புலிகளின் பதுங்கு நிலை மீது ராணுவம் பீரங்கித் தாக்குதல் நடத்தியது. இதில், 9 புலிகள் உயிரிழந்தனர். 47 பேர் படுகாயமடைந்தனர். ராணுவத் தரப்பில் 3 பேர் கொல்லப்பட்டனர், 10 பேர் காயமடைந்தனர்.
இதேபோல, ஓமந்தைப் பகுதியில் நடந்த இன்னொரு சண்டையில் 6 விடுதலைப் புலிகள் உயிரிழந்தனர். வெளி ஓயா பகுதியில் நடந்த மற்றும் ஒரு சண்டையில், 4 விடுதலைப் புலிகள் உயிரிழந்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications