தேயிலைத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக நாளை அதிமுக உண்ணாவிரதம்

Subscribe to Oneindia Tamil


சென்னை: நலிந்த தேயிலை தொழிலாளர்களுக்கு ஆதரவாக கோத்தகிரியில் நாளை அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி பச்சைத் தேயிலைக்கு விலை நிர்ணயம் செய்யாமலும், நலிந்த தேயிலை தொழிலாளர்கள் மீது அரசு ஜப்தி நடவடிக்கை எடுக்காமல் இருப்பது, நீலகிரி மாவட்டத்தில் உள்ள மோசமான சாலைகளை மேம்படுத்தாத ஊராட்சி, பேரூராட்சி வார்டுகளில் வளர்ச்சி பணிகள் நடைபெறாதது;

கெரடா மட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையை சீர்படுத்தாதது, சமூக வனப்பகுதிகளில் காட்டு மரங்களை வெட்டிக் கடத்துவது, சாலை அமைக்கும் பணிகளை பாதியிலேயே நிறுத்திவிட்டது; இது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கழக உடன்பிற்பபுகள் மீது பொய் வழக்குகள் போடுவதை கண்டித்தும், நீலகிரி மாவட்டக் கழகத்தின் சார்பில் நாளை (3ம் தேதி) கோத்தகிரி அண்ணா திடலில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம்
நடைபெறும்.

அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் டாக்டர் தம்பித்துரை எம்.எல்.ஏ தலைமையில் உண்ணாவிரதம் நடைபெறும்.

நீலகிரி மாவட்ட மக்களின் ஜீவாதார பிரச்சனைகளை முன்வைத்து நடைபெற உள்ள இந்த உண்ணாவிரத போராட்டத்தில் அனைத்து தேயிலைத் தொழிலாளர்களும், பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்து கொண்டு ஆதரவு நல்கிட வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+