வேணுகோபால் நீக்கம்-மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
டெல்லி: டெல்லி அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழகத்தின் (எய்ம்ஸ்)இயக்குநர் பதவியிலிருந்து டாக்டர் வேணுகோபால் டிஸ்மிஸ் செய்யப்பட்டது குறித்து மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவசர சட்டத் திருத்தத்தின் மூலம் மத்திய அரசு எய்ம்ஸ் டைரக்டரின் பதவி காலத்தை 65 ஆக குறைத்து ஜனாதிபதியிடமும் ஒப்புதல் பெற்றது.
ஜனாதிபதி கையெழுத்திட்ட சில மணி நேரங்களில் மத்திய நலத் துறை அமைச்சர் அன்புமணி பிறப்பித்த உத்தரவையடுத்து வேணுகோபால் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
இந்த சட்டத் திருத்தத்தை எதிர்த்து வேணுகோபால் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் வேணுகோபால் பதவி நீக்கம் செய்யப்பட்டது குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications