வாக்கிங் சென்ற கிறிஸ்தவ மேடைப் பாடகர் படுகொலை
சேரன்மகாதேவி: நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே நேற்று காலை வாக்கிங் சென்ற கிறிஸ்தவ மேடை பாடகரை மர்ம கும்பல் ஒன்று சராமரியாக வெட்டி கொன்று விட்டு தப்பியது.
சேரன்மகாதேவி அருகே உள்ளது ஓடைகரை கிராமம். இங்குள்ள தெற்கு தெருவை சேர்ந்தவர் ஜெபமணி. இவருக்கு தாவீது, ஞானதாஸ், சாமுவேல், ஜெபராஜ், ஆல்பர்ட் ஆகிய 5 மகன்களும், நகோமி, அருள்செல்வி என்ற 2 மகள்களும் உள்ளனர். இதில் நகோமி, ஜெபராஜ் இருவருக்கும் திருமணமாகவில்லை.
இதில் ஜெபராஜ் மேடை பாடகராக உள்ளார். மும்பையில் இருந்த கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் சொந்த ஊருக்கு வந்த இவர் ஓடைக்கரையில் அக்காள் நகோமியுடன் வசித்து வந்தார்.
ஜெபராஜ் நேற்று காலை 6 மணி அளவில் ஓடைக்கரையில் இருந்து கோவிந்தபேரி செல்லும் சாலையில் வாக்கிங் சென்றார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ஜெபராஜை வழிமறித்து அரிவாள் மற்றும் ஆயுதங்களுடன் சரமாரியாக தாக்கினர்.
இதில் தலை, கழுத்து, கை, கால்களில் வெட்டப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.












Click it and Unblock the Notifications