திருச்சி கைதி மருத்துவமனையில் சாவு
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தார்.
நாகை மாவட்டம், திருவாசியை சேர்ந்தவர் கணேசன் (50). இவர் மீது பல திருட்டு வழக்குகள் உள்ளன. இவரை மயிலாடுதுறை போலீசார் சில தினங்களுக்கு முன் திருட்டு வழக்கு ஒன்றில் கைது செய்தனர். பின்னர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் இருந்த அவருக்கு கடந்த 24 ம் தேதி திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டது. கணேசனை பரிசோதித்த டாக்டர்கள் திருச்சி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற பரிந்துரை செய்தனர்.
அதன் பேரில் கணேசனை சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவ மனையில் சிறை அதிகாரிகள் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி கணேசன் இறந்தார்.
இது குறித்து உறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications