For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சாலை மோசடி-ஆலங்குளத்தில் அதிமுக ஆர்ப்பாட்டம்

By Staff
Google Oneindia Tamil News

ஆலங்குளம்: ரோடு போட்டதில் மோசடி நடந்ததால் அதனை கண்டித்து ஆலங்குளத்தில் இன்று அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆலங்குளத்தில் இருந்து செங்கோட்டை வரை 31 கிமீ தூரம் ரூ.63 லட்சத்தில் புதிய தார் ரோடு போடும் பணி நடைபெற்று வருகிறது. பல இடங்களில் ஜல்லி கற்கள் பெயர்ந்து ரோடு மிகவும் மோசமாக உள்ளது.

தரமற்ற ரோடு போட்டுள்ளதை கண்டித்து ஆலங்குளத்தில் இன்று அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

பேரூராட்சி தலைவர் சொக்கலிங்கம் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் யூனியன் சேர்மன் கார்த்திகேயன், பேரூராட்சி கவுன்சிலர்கள் பழனிசங்கர், ராமலிங்கம், சாலமோன்ராஜன், சொரிமுத்து, மோகன்ராஜ், நகர செயலாளர் சுப்பிரமணியன், வக்கில் சாந்தகுமார், மதிமுக ஒன்றிய செயலாளர் லாலாமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆலங்குளம் டிஎஸ்பி கிங்ஸ்லின், சப்-இன்ஸ்பெக்டர் தளவாய் சுந்தரம் ஆகியோர் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X