நகராட்சி துணைத் தலைவரை கொல்ல முயற்சி?

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: ராஜபாளையம் நகராட்சி துணைத் தலைவரை காரை ஏற்றி கொல்ல முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருநகர் மாவட்டம், ராஜபாளையம் நகராட்சி 40வது வார்டு உறுப்பினர் மணிகண்டராஜா. கடந்த சில தினங்களுக்கு முன் ராஜபாளையம் நகராட்சி துணைத் தலைவராக இவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

இவர் தனது வார்டுக்கு உட்பட்ட துரைசாமிபுரம் பகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டு இருந்தார். மேலும் மக்களிடம் குறைகளை கேட்டு மனுவையும் பெற்றுக் கொண்டு தனது ஆதரவாளர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்த பின்னர் தனது காரில் இரவு 10 மணிக்கு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்

அப்போது எதிரே வேகமாக வந்த கார் மணிகண்டராஜாவின் காரின் மீது மோதும் வகையில் வந்தது. அதற்குள் மணிகண்டராஜாவின் கார் டிரைவர் சுதாரித்துக் கொண்டதால் நகராட்சித் தலைவரும், ஓட்டுனரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இது குறித்து மணிகண்டராஜா ராஜபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார், மணிகண்டராஜாவை கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டவர்கள் யார் என்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் டிஎஸ்பி முருகேசன் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினார்.

நகராட்சி துணைத் தலைவரை கொல்ல முயன்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+