மலேசிய அதிகாரியை சம்மன் செய்த இந்தியா
டெல்லி: இந்தியாவுக்கான மலேசியத் தூதரை மத்திய அரசு அழைத்து தனது கவலையைத் தெரிவித்துள்ளது.
மலேசியாவில் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்து அந்த நாட்டுத் தூதரக அதிகாரியை அழைத்து வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் பேசினர்.
அப்போது இது தனது உள்நாட்டுப் பிரச்சனை என அந்த தூதரக அதிகாரி கூறியதாகவும் அதே நேரத்தில் பிரச்சனையைத் தீர்க்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.
இது குறித்து வெளியுறவுத்துறைச் செயலாளர் சிவசங்கர் மேனன் கூறுகையில், இந்தியாவில் இந்தப் பிரச்சனைக்கு எழுந்துள்ள கவலை குறித்து மலேசியாவுடம் தெளிவாக எடுத்துக் கூறிவிட்டோம்.
அது உள்நாட்டுப் பிரச்சனை என மலேசியா கூறினாலும் வேண்டிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளது. அது உள்நாட்டுப் பிரச்சனை என்பதை இந்தியாவும் ஏற்கிறது, அதே நேரத்தில் இந்தியர்கள் நடத்தப்படும் முறை குறித்து கேள்வி எழுப்பினோம் என்றார்.