For Daily Alerts
Just In
யாழ்ப்பாணம் சண்டையில் 18 விடுதலைப் புலிகள் பலி
கொழும்பு: யாழ்ப்பாணத்தில் நடந்த கடும் சண்டையில் 18 விடுதலைப் புலிகளும், 2 ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டனர்.
நாகர்கோவில் என்ற இடத்தில் நடந்த தாக்குதலில் 3 விடுதலைப் புலிகள் பலியானார்கள். 2 பேர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலில் இலங்கைத் தரப்பில் ஒரு வீரர் காயமடைந்தார்.
முகமலையில் நடந்த இன்னொரு தாக்குதலில் 5 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர். 2 புலிகளின் பங்கர்களும் தகர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கிலாலி பகுதியில் நடந்த மற்றொரு தாக்குதலில் 10 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் 2 ராணுவ வீரர்கள் பலியானார்கள். 3 பேர் காயமடைந்தனர்.
Comments
Story first published: Saturday, December 15, 2007, 11:46 [IST]