For Daily Alerts
Just In
சென்னை உள்பட தமிழகத்தில் மழை நீடிக்கும்புதன்கிழமை, டிசம்பர் 5, 2007
சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் சென்னை உள்பட வட மாவட்டங்களில் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் இன்று காலையில் சென்னை, திருவள்ளூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
சென்னையின் புறநகர் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி, சோழாவரம் உட்பட பல இடங்களில் இன்று காலை முதல் நிற்காமல் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்தது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
தென்மேற்கு வங்கக் கடலில் தமிழக கடற்கரைக்கு அருகில் லேசான காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் கடலோரப் பகுதிகள் உட்பட தமிழகம் முழுவதும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Comments
Story first published: Thursday, May 24, 2007, 5:30 [IST]