3 பவுன் நகைக்காக மருமகளைக் கொன்ற மாமியார் கைது
சென்னை: தாய் வீட்டிலிருந்து வரதட்சணையாக 3 பவுன் தங்க நகையை வாங்கி வராததற்காக மருமகளை தீ வைத்து எரித்துக் கொலை செய்த மாமியாரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை கொருக்குப்பேட்டையில் வசித்து வருபவர் மாடசாமி. இவரது மனைவி மங்கையர்க்கரசி (23). இருவருக்கும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
திருமணத்தின்போது, பெண் வீட்டார், 10 பவுன் நகையும், ரூ. 10 ஆயிரம் ரொக்கமும் தருவதாக கூறினர். ஆனால் கல்யாணத்தின்போது 7 பவுன் நகை மட்டுமே அவர்கள் போட்டதாக கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்த மாடசாமியின் தாயார் கன்னியம்மாள் (46), மங்கையர்க்கரசியை அடித்து, உதைத்துக் கொடுமைப்படுத்தி வந்துள்ளார். திங்கள்கிழமை மங்கையர்க்கரசியை மீண்டும் அடித்து உதைத்துள்ளார்.
அப்போது வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து மருமகள் மீது ஊற்றி தீவைத்தார். மங்கையர்க்கரசியின் அலறல் சப்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு ஏற்கனவே மங்கையர்க்கரசி இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து ராதாகிருஷ்ணன் நகர் காவல் நிலையத்தில் மங்கையர்க்கரசியின் பெற்றோர் புகார் கொடுத்தனர். இதையடுத்து கன்னியம்மாள் கைது செய்யப்பட்டார்.
-
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுமா? சென்னையில் பீதி.. பொது சுகாதாரத்துறை விளக்கம் -
ரயில்கள் மீது கல் வீசினால் 10 ஆண்டு ஜெயில் தண்டனை.. சென்னை ரயில்வே கோட்டம் கடும் எச்சரிக்கை! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications