செந்நிறமாக மாறிய திருச்செந்தூர் கடல் - ரசாயன கழிவு கலந்ததா?
திருச்செந்தூர்: திருச்செந்தூர் கடல் பகுதி திடீரென செந்நிறமாக மாறி காட்சி அளித்தது. ரசாயன கழிவு கலந்தததே இந்த மாற்றத்திற்கு காரணம் என்று கடலோரப் பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சுனாமிக்கு பிறகு திருச்செந்தூர் கடலில் அடிக்கடி மாற்றம் ஏற்பட்டு வருகிறது. வழக்கமாக கடலின் கரை பகுதி நீலநிறமாகவும், ஆழ்கடல் பகுதி பச்சை நிறமாகவும் காடசி தரும். ஆனால் கடந்த 3 நாட்களாக திருச்செந்தூர் கோயில் மற்றும் அதைச் சுற்றி 200 மீட்டர் தூரம் வரை கடல் செந்நிறமாகவும் அதற்கு அப்பால் நீல நிறமாகவும் காட்சி அளிக்கிறது.
குமரி கடல் பகுதியில் வீசும் சூறாவளி காற்றின் தாக்கத்தால் இந்த மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என கருதப்பட்டது.
ஆனால் இதுகுறித்து விசாரித்த போது ஒரு தனியார் தொழிற்சாலையில் இருந்து கழிவு நீரை கடலில் திறந்து விட்டதே இந்த நிற மாற்றத்திற்கு காரணம் என்று கடற்கரை கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.
திருச்செந்தூர் கடலில் ஏற்பட்டுள்ள இந்த நிற மாற்றம் புன்னக்காயல், மணப்பாடு, பெரியதாழை வரை வியாபித்துள்ளது. ஆனால் திருச்செந்தூர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் வழக்கம்போல் கடலில் புனித நீராடி செல்கின்றனர்.












Click it and Unblock the Notifications